எல்லாம் இன்பமயம்! அவனின்றி அணுவும் அசைவதில்லை!
காதல்
காதலித்துப் பார்நீ கவிதை பிறக்கும் ....கடவுளாகத் தெரிவான் கடிதம் தருவோன்! பேதலித்துச் சொல்ல வில்லை! காதல் ...
கலிவிருத்தம்
ReplyDelete(அனைத்தும் காய்ச் சீர்கள்)
மண்ணவளை ஒளியூட்டி மகிழ்விக்க வந்தவனோ? பெண்ணவளின் மேனியெங்கும் பேரொளியைப் பெய்தானோ? கண்ணெதிரில் கண்டதுமே கசிந்துருகி நின்றாளோ ? விண்ணவனே என்றுநாமும் விளிக்கின்ற வெய்யோனே
~~செல்லமுத்து பெரியசாமி
குறள் வெண்பா
Deleteஇலக்கணம் கற்பாயே இன்பமுடன் வந்து கலக்கு கவிதை புனைந்து!
: இன்னிசை வெண்பா
மண்ணுள் புதையுண்ட மாபெரும் நாகரீகம்
கண்ணைக் கருத்தைக் கவர்கின்ற எச்சங்கள்
விண்முட்ட நம்தமிழ் வீற்றிருந்த காலமது
பண்பாட்டின் உச்சமெனப் பார்!
தலைப்பு:- கீழடி இன்னிசை வெண்பா
மண்ணுள் புதையுண்ட மாபெரும் நாகரீகம்
கண்ணைக் கருத்தைக் கவர்கின்ற எச்சங்கள்
விண்முட்ட நம்தமிழ் வீற்றிருந்த காலமது
பண்பாட்டின் உச்சமெனப் பார்!
~~செல்லமுத்து பெரியசாமி