காதல்
காதலித்துப் பார்நீ கவிதை பிறக்கும் ....கடவுளாகத் தெரிவான் கடிதம் தருவோன்! பேதலித்துச் சொல்ல வில்லை! காதல் ....போதையிலே உதிர்த்த உண்மை முத்து! காதலின்றேல் சாதல் நலமே என்றும் ....கடைப்பார்வை மலையைக் கடுகா யாக்கும் ஆதலினால் காதல் செய்வீர் என்றெலாம் ...ஆன்றோர்கள் சொல்லி வைத்தார் நமக்கு!